28 ஜனவரி, 2012

28/01/2012


1.  ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்ற, ஜி 4 நாடுகளின் பரிந்துரைக்கு, பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 
2. ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகள் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்துள்ளார். 
3. சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
4.  பகவத் கீதை மத நூல் அல்ல ;அது வாழும் நெறி எனவும், சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக்கூறியுள்ளது.
5. இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள, லகுரக ஆளில்லா போர்விமானம் லக்ஷயா-2 ,வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
6. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை ` 52.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.
7.  கூடங்குளம் அணுமின் நிலையம் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
8. தஞ்சை மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
9. நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.அடிலெய்டில் நடைபெற்ற இறுதி மட்டைப்பந்துப் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.இத்தொடருடன் ராகுல் திராவிட் ஓய்வுபெறுவார் என நம்பப்படுகிறது.                                                           


Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...