31 ஜனவரி, 2012

31/01/2012


1. அமெரிக்கா - தென் கொரியா நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சி, அணு ஆயுதப் போரைத் தூண்டி விடும் என, வடகொரியா எச்சரித்துள்ளது. 
2.தென் அமெரிக்க நாடான பெருவில், நேற்று, ரிக்டர் அளவு கோலில் 6.3 புள்ளிகள் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில்,60 பேர் காயமடைந்தனர். 
3.ஜப்பானின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருவதாகவும், 2060 ஆம் ஆண்டு, தற்போதைய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
4. பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல், அசம்பாவிதங்கள் எதுவுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. பஞ்சாபில் 80 விழுக்காடு வாக்குகளும், உத்தரகண்டில்,70 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
5.எந்த அரசு பதவியையும் வகிக்கக் கூடாது என, தனக்கும், மற்ற மூன்று விஞ்ஞானிகளுக்கும் அரசு சார்பில் விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என, இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். 
6. சங்க இலக்கியத்தில் பெருமை பெற்ற புறநானூற்றுப் பாடல்கள் அடங்கிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல், திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் சிறப்பாக வெளியிடப்பட்டது.
7. புயலால் ஏற்பட்ட பாதிப்பை போக்க, இடைக்கால நிவாரண நிதியாக ` 500 கோடி மத்திய அரசு வழங்கியதற்கு, தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது.
8.தானே புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளான கடலூர், மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், `1000 கோடி செலவில், 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9. இன்றைய மாணவர்கள், எதிர்காலத்தில் முதியோர் இல்லங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்.
10. சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில், இந்தியாவின் சானியா மிர்சா, மிக அதிகபட்சமாக 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

30 ஜனவரி, 2012

30/01/2012


1. சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுகளைத் தடுப்பதிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் இந்தியா 125-வது இடம் வகிப்பதாக யேல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.  இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமுகமாக வேண்டியது மிகவும் அவசியம் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப்ரசா கிலானி கூறியுள்ளார்.
3. சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது.
4.பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநில சட்டசபைத் தேர்தல்கள், பலத்த பாதுகாப்புடன் இன்று நடக்கின்றன. 
5.  மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில், சாதாரண வகுப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தெரியவந்துள்ளது.
6.  ஊழலால் விளையும் தீமைகள் குறித்து, பள்ளிப் பாடநூல்களில் புதிய பாடத்திட்டங்களைப் புகுத்தி, மாணவ, மாணவியரிடையே ஊழல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
7. இந்திய, ஜப்பான் கடலோரக் காவல் படையினர் இணைந்து, சென்னை அருகே, நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர். 
8.  வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 141வது தைப்பூச ஜோதி தரிச விழா எதிர்வரும், 7ஆம் தேதி நடக்கிறது. 
9. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக விளையாடாமல், படுதோல்வி கண்டதன் எதிரொலியாக, டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர் இந்திய வீரர்கள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், ஆடவர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
                                                                

28 ஜனவரி, 2012

28/01/2012


1.  ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலை விரிவாக்க வேண்டும் என்ற, ஜி 4 நாடுகளின் பரிந்துரைக்கு, பல நாடுகள் ஆதரவளித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. 
2. ஆப்கானிஸ்தானில் இருந்து பிரான்ஸ் படைகள் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் வெளியேறும் என அதிபர் நிகோலஸ் சர்கோஸி தெரிவித்துள்ளார். 
3. சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
4.  பகவத் கீதை மத நூல் அல்ல ;அது வாழும் நெறி எனவும், சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்புக்கூறியுள்ளது.
5. இந்திய விமானப் படைக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள, லகுரக ஆளில்லா போர்விமானம் லக்ஷயா-2 ,வெள்ளிக்கிழமை இரண்டாவது முறையாக வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
6. தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, இதுவரை ` 52.41 கோடி வழங்கப்பட்டுள்ளது.
7.  கூடங்குளம் அணுமின் நிலையம் 3 மாதங்களில் செயல்படத் தொடங்கும் என, இந்திய அணுசக்தி ஆணையத் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
8. தஞ்சை மாவட்ட விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பிப்ரவரி 5ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
9. நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.அடிலெய்டில் நடைபெற்ற இறுதி மட்டைப்பந்துப் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.இத்தொடருடன் ராகுல் திராவிட் ஓய்வுபெறுவார் என நம்பப்படுகிறது.                                                           


Free Code Script

27 ஜனவரி, 2012

27/01/2012


1. ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
2.  இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின் பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது.
3. தோட்டக்கலைத் துறையில் அதிக விளைச்சல் தரும், உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை கட்டாயமாக்க பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
5.  மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை வியாழக்கிழமை மாலை முடிவடைந்தது. அங்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.
6.  ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில், பதக்கம் பெறும் அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை ரூ.1.25 கோடி நிதியில் தொடங்க தமிழக முதல்வர் உத்தரவு.
7. தமிழகப் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
8.  நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ரூ.152.78 கோடியை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
9. நேற்று வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த, குடியரசு தின விழாவில், பயனாளிகள் 136 பேருக்கு ரூ.82 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான,அரசு  நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
10. அடிலெய்டு டெஸ்டில், துணிச்சலாகப் போராடிய இளம் விராத் கோஹ்லி மட்டும், சதம் அடித்து ஆறுதல் தந்தார். தற்போது, இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.                                                                 -பாரதிஜீவா

Free Code Script

25 ஜனவரி, 2012

25/01/2012


1. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
2. கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இதய நோய் உள்ளவர்களுக்கு போலியான மருந்துகளை அளித்ததில் 67 பேர் உயிரிழந்தனர்.
4.முல்லைப் பெரியாறு அணை தொடர்பான, நீதிபதி ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை, பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
5. தண்டனைக் காலம் முடிந்த பின்னரும், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுவிக்காத, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
6. கன்னியாகுமரி திருவள்ளுர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசுவதற்கு சுற்றுலா அதிகாரிகள் தொல்பொருள் தொல்பொருள் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
7. கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க,தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
8. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு ஏற்படாததையடுத்து, மீண்டும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9. இந்தியாவுக்கு எதிரான 4ஆவது தொடர் மட்டைப்பந்துப் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
10. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.                                              
                                                                                                                                       -- பாரதிஜீவா

Free Code Script

24 ஜனவரி, 2012

24/01/2012


1. எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின் வெளியேற்றத்திற்குப் பின் நேற்று, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 
2.  நாடு திரும்ப உள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
3. தேசிய மனித உரிமை ஆணையத்தில், இன்னும் 15 ஆயிரத்து 400 புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
4. நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் படுத்துத் தூங்கும் மக்களுக்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக மைய மின் துறை அமைச்சர் சுசீல்குமார் சிண்டே அறிவிப்பு.
6.  இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை 10 ஆண்டு குத்தகை அடிப்படையில், ஷ்யா அளித்துள்ளது  இதற்கு 90 கோடி அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும்.
7.  சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டப் பணியின் இரண்டாம் கட்டமாக, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்க ரூ. 1,075 கோடியை ஒதுக்கீடு செய்து,தமிழகமுதல்வர் உத்தரவு.
8. மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
9. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா ஜோடி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
10.  இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது, கடைசித் தொடர் மட்டைப்பந்துப்போட்டி அடிலெய்ட் நகரில்,இன்று தொடங்குகிறது.
                                                                                                          -பாரதிஜீவா.

Free Code Script

23 ஜனவரி, 2012

23/01/2012


1.  நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலர் பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மக்களின் பேராதரவுடன், தான், நாடு திரும்பப் போவதாக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்,தெரிவித்துள்ளார்.
3. இலக்கிய விழாவில் நான் கலந்து கொள்வதை தடுக்கவே, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ராஜஸ்தான் போலீசார் பொய் கூறியுள்ளனர் என, சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
4. பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கும் என, உச்சநீதிமன்றம் நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். 
5. தன்னைக் கேலிசெய்த மூன்று இளைஞர்களை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகா. அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.
6.  இந்தியாவில் நடக்கும், இந்திய-அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான "யூத் அபியாஸ்' எனும் கூட்டுப் பயிற்சியில், முதல்முறையாக, அமெரிக்க டாங்குகள் பங்கேற்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
7. தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்காக, இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதலமைச்சர் உத்தரவு.
8. திருக்குறளை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று, சென்னை "தலைநகர் தமிழ்ச் சங்கம்' கோரிக்கை விடுத்துள்ளது.
9.  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 
10.  5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 313 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.                   -பாரதிஜீவா

Free Code Script

21 ஜனவரி, 2012

21/01/2012


1.  ஆப்கானிஸ்தானில் உள்ள, நேட்டோ படைகளின் வசதிக்காக, மூடப்பட்டுள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சாலையை மீண்டும் திறக்க, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. 
2. அணுஉலைகளின் ஆயுட்காலத்தை, 40 ஆண்டுகளிலிருந்து, 60 ஆண்டுகளாக உயர்த்த, ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மீண்டும் அணுசக்தியை அதிகரிக்கும் நாடாக, ஜப்பான் மாறுகிறது.
3. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் விரைவில் அனுசரிக்கப்பட உள்ளநிலையில், குஜராத் முதல்வர் நேற்று, நல்லிணக்க உண்ணாநிலை மேற்கொண்டார்.
4.  சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் இந்திய பயணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.
5.  நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தினை பொது-தனியார் கூட்டாண்மை அடிப்படையில் ரூ.380 கோடியில் மேம்படுத்த தமிழக முதல்வர்உத்தரவு.
6. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற கட்டடத்தின் வடிவமைப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
8. புதுமையாகவும், மாறுபட்டும் சிந்திக்கும் திறனை  மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டுமென, இஸ்ரோ முதன்மை ஆலோசகர் ஒய்.எஸ். ராஜன் பேசினார்.
9. ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புத் தர இது தான் சரியான நேரம். அடிலெய்டு டெஸ்டில் இவரை களமிறக்க வேண்டும், என, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் வெங்சர்க்கார், கிரண் மோரே ஆகியோர் வேண்டுகோள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, ஸ்பெயின் வீரர் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினர்.                                                                                   -பாரதிஜீவா

Free Code Script

20 ஜனவரி, 2012

20/01/2012


1. வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க, சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக, இரண்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. இலங்கையில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 100 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இம்மாதம் தாயகம் திரும்பலாம் என்ற தனது திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார்.
4. புதுச்சேரியில், அண்மையில் வீசிய தானே புயலால், வரலாற்றுச் சின்னமான அரிக்கமேடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5.  இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான, கோஸ்டா கன்கார்டியா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் 15 பேர், நேற்று இந்தியா திரும்பினர்.
6. மேற்குவங்கத்தில், விரைவுத்தொடர்வண்டியின்,ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ,ரூபாய் 23 லட்சத்தைக் கண்டெடுத்த பெண் துப்புரவு தொழிலாளி, அதை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
7.  லோக்ஆயுக்தா நீதிபதி நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு, மனு தாக்கல் செய்துள்ளது
8. சமையல் எரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எனினும், எரிவாயு கொண்டு வரப்பட்டு,உருளைகளில் நிரப்பித் தர ஒரு வாரம் ஆகலாம்.
9.  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்களை பயமுறுத்தி வரும் குரங்குகளைப் பிடிக்க, வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
10. அஜர்பைஜானுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்களிலும் இந்திய மகளிர்அணி வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
                                                                                                -பாரதிஜீவா

Free Code Script

19 ஜனவரி, 2012

19/01/2012


1. மியான்மரில் வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 
2. அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அதிபர் பஷர் அல் அசாத்,உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
3. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். 
4. பதிமூன்று நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில், மகாத்மா காந்தியின் சுயசரிதை நூலான, சத்திய சோதனை 5,000 பிரதிகள் விற்று, தமிழக வாசகர் மனதில் இடம் பிடித்துள்ளது.
5. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு சீருடை, காலணி, புத்தகப் பை உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு செய் முதல்வர், அதிக
மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
6.  தமிழக அமைச்சரவையில் 4 பேரின் துறைகள் நேற்று மாற்றப்பட்டன.புதிய கல்வித்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்கிறார்.
7. ரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காணும் விதத்தில்,முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
8. கோவை அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகளில் ஒன்றான, குறைந்த கட்டணத்தில் செய்யப்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில், கடந்தஆண்டு 5,861 பேர், பரிசோதனை செய்து பயனடைந்துள்ளனர். 
9.  ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றுவோம் என தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டன் லட்சுமிபதி பாலாஜி நம்பிக்கை தெரிவித்தார்.
10.  இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் மட்டைப்பந்துஆட்டத்தில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.                               -                        
                                                                                                -பாரதிஜீவா

Free Code Script

18 ஜனவரி, 2012

வீட்டுக்கடனுக்கான வருமானவரிச் சலுகை

வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா? ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.கடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.எனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly Instalment-EMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
  மாதத்தவணை
 வீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது கடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.இந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.எனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.வருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு விதமாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.இந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா? பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.இந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். மேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.ஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.எந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.உதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல. நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.இந்தச் சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே. எனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.அடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது? வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.அதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.நீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
 முன்னதாக செலுத்தப்படும் வட்டி
கடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.அவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செலுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.உதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.ஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.ஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்? இருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும். உதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.வருமானவரிச்சலுகை தொடர்பான கூடுதல் தகவல்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தின் (http://www.incometaxindia.gov.in) மூலம் அறிந்து கொள்ளலாம்.

Free Code Script

18/01/2012

1. சீனாவில் மொத்த மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டோர், நகரங்களுக்கு வந்து விட்டதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2. அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகஅறிவித்துள்ளது.
3. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
4. இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது 5.55
5.எதிர்வரும் ஜூலை மாதம், பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் தற்போதைய குடியரசுத் தலைவர்.
6. மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, கடும் பனிப்பொழிவு உள்ளது.
7. வணிகவரித் துறையை ரூ. 230 கோடியில் முழுமையாக கணினிமயமாக்க தமிழகமுதல்வர் உத்தர விட்டுள்ளார்.
8. புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வரை, மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று, கடலூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.
9. தோஹாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றது.
10. சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
                                                                                                                                    -பாரதிஜீவா

Free Code Script

13 ஜனவரி, 2012

13.01.2012

1. பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், பாதுகாப்புச் செயலர் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வியாழக்கிழமை துபைக்குச் சென்றுவிட்டார்.
2. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இரண்டு நாள் இஸ்ரேலியப் பயணத்தின்போது,  மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது.
3.  சோமாலிய கடற்பகுதியில் அடிக்கடி நிகழும் கடற்கொள்ளையைத் தடுக்க அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைந்த உத்தியுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம் என்று இந்தியா ஐ.நா அவையில் வலியுறுத்தியுள்ளது.
4. மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 இல், சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சியில் 50 லட்சம் மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர்.
5. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாக உயர்ந்தது.
7. பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்புப் பேருந்துகளை, 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
8.  புயலில் பல நூறு ஏக்கர் கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடுதல் விலைக்கு கரும்பு விற்கப்படுகிறது.
9.எரிவாயு எடுத்துச் செல்லும், சரக்குந்து உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
10. 2015- ஆம் ஆண்டுடைபெறவுள்ளஉலக கோப்பைத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியதன் மூலம், தொடர் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதை சூசகமாக தெரிவித்தார் தோனி.
                                                                                                                        -பாரதிஜீவா

Free Code Script

12 ஜனவரி, 2012

12/01/2012


                                                        
1.  தெற்காசிய நாடுகளில், பத்தாண்டுகளில், இராணுவத்திற்கான செலவு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
2. பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், வேலைக்காக  பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிகாவுக்குக் கூட செல்ல, அந்நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். 
3. பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேர்மையற்றவர் என உச்சநீதிமன்றம் பகிரங்கமாகத் தாக்கியுள்ளதை அடுத்து, இராணுவம் எச்சரிக்கை.
4. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 
5. உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர, அவர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்ட ` 28 கோடி சிக்கியுள்ளது. 
6. 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறும், ஏழைகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை” தமிழக முதல்வர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
7.  தானே புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும் தென்னை போன்ற பயிர்களை மீண்டும் பயிரிட இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
8.  கூடங்குளம் அணுஉலை 3 மாதங்களில் இயங்கத் தொடங்கும் என இந்திய அணு மின் கழகத்தின் இயக்குநர் எஸ்.ஏ. பரத்வாஜ் தெரிவித்தார்.
9. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.03 அடியாக இருந்தது. 
10. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்தது போன்ற சோகம் ஆஸ்திரேலிய தொடரில் ஏற்படாது. கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெறுவோம்,'' என, இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
                                                                                                -பாரதிஜீவா




Free Code Script

10 ஜனவரி, 2012

10/01/2012


                                                                 
1. இந்தியா - சீனா இடையிலான ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த, இந்திய ராணுவப் பிரதிநிதிகள் 15 பேர் கொண்ட குழு நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கிற்குச் சென்றது. 
2. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்தார்.
3. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களுக்கு, ஒன்பது கோடி ரூபாய் வரை, மானியம் வழங்க, தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
4.  உத்தர பிரதேசத்தில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வாகனத்திலிருந்து ` 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 
5. நதிகளை இணைக்க, இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன என்பது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என,உச்சநீதிமன்றம் மய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
6. இந்தியாவில் முதல்முதலாக, கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்யும் ரேடார் கருவி, குளச்சல் பகுதியிலுள்ள கடலில் அமைக்கப்பட்டது. 
7. வன விலங்குகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது என்பதற்காக, அவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என, சென்னை ஆராய்ச்சி பிரிவு, தலைமை வனப் பாதுகாவலர் கூறியுள்ளார்.
8. மட்டைப்பந்துத் தொடர் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' விளையாட்டில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
                                                                             -பாரதிஜீவா


Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...