27 ஆகஸ்ட், 2011

தமிழக ஆளுநராக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

      ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெனாலி என்ற இடத்தில் பிறந்த ரோசையா, வணிகவியலில் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பருவத்தில் மாணவர் தலைவராக தேர்வான அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார். 1968, 1974, 1980 ஆகிய ஆண்டுகளில் ஆந்திர சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 முதல் 1997ம் ஆண்டு வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற ரோசையா, ஜெகன்மோகன் ரெட்டி சூறாவளியில் சிக்கி அடுத்த ஆண்டே பதவியிழந்தார். ஆந்திர சட்டசபையில் 16 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அவர் சாதனை படைத்துள்ளார். தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். ரோசையாவுக்கு சிவலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ செய்தியை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...