10 பிப்ரவரி, 2011

தமிழ் முதற்றாள் - முக்கிய வினாக்கள்


                                                         தமிழ் முதற்றாள்

காலம்-3மணி ---------- செய்யுளும், இலக்கணமும் ---------------  மதிப்பெண்கள்-100

அ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் ஐந்து வரிகள் வீதம் விடை எழுதுக.                             4x2=8
1. ஒறுத்தாரும்,பொறுத்தாரும் எய்துவன யாவை?
2. ‘தம்பிரான் தோழர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்? காரணம்  யாது?
3. பாஞ்சாலி சபதம் பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக.
4. அறிவுடையார், அறிவிலார் இயல்பினைச் சுட்டுக.
5. வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் யாவை?
6. வரைவுகடாதல் என்றால் என்ன?
ஆ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்துவரிகள் வீதம் விடை எழுதுக.                              3x4=12
7. இந்தியர் அனைவரும் எவ்வெண்ணத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்?                          ஏன் ?
8. புறநானூறு பற்றிக் குறிப்பு வரைக.
9. வினைமேற்சென்ற தலைவனிடம், தூதுவந்த பாணன் தெரிவித்த செய்தி யாது?
10.தலைவன் வரைவு நீட்டித்தவிடத்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியதை விளக்குக.
11. ஒறுத்தார்,பொறுத்தார் குறித்துக் குறள் கூறுவன யாவை?
இ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ஒவ்வொன்றிற்கும் பத்துவரிகள் வீதம் விடை எழுதுக.                              3x4=12
12. இராஜராஜ சோழனின் வில், வாள்,முரசு,கொடி,குடை குறித்துக் கூறப்பட்டன யாவை ?
13. தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை எழுதுக.
14.சுவடிச் சாலையில் இருக்கவேண்டிய நூல்கள் யாவை?
15.சிக்கனத்தால் வரும் பயன்கள் யாவை?
16.குலசேகர ஆழ்வார் வேண்டுவதும், வேண்டாததும் யாவை?
ஈ) பின்வரும் வினாக்களுள் எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் இருபது வரிகளில் விடை எழுதுக.                                                                         1x8=8
17. செய்ந்நன்றியறிதல் பற்றி வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
18. கண்ணகியின் சூளுரையும், நகர் மாந்தர் மயங்கிக் கூறியனவும் யாவை ?
19. மூலையில் கிடக்கும் வாலிபனிடம், தாராபாரதி கூறும் அறிவுரைகளைத் தொகுத்து எழுதுக.

உ) பின்வரும் செய்யுளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.                                                                                                        4x1=4
20. ”குருகுமுண்டு தான் மணந்த ஞான்றே ”
அ) இஃது யார் யாரிடம் கூறியது?
     ஆ) இக்கூற்றமைந்த செய்யுளைப் பாடியவர் யார்?
     இ) இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
     ஈ)   குருகு- என்பதன் பொருள் யாது?
                                                              அல்லது
21. “மதம்பொழி கரிமேல் நாயடா வினை நடத்துமோ?”
     அ) இக்கூற்றைக் கூறியது யார்?
     ஆ) யாரை நோக்கிக் கூறியது?
     இ) இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
     ஈ) கரி- எனக் குறிப்பிட்டது யாரை?
ஊ)  22. “மனிதரெலாம்” எனத் தொடங்கும் பாடலை அடிபிறழாமல் எழுதி, அதன்
      பாவகையையும்  எழுதுக.                                                                                              4+2=6
23. “ உதவி” எனத் தொடங்கும் குறளையும், “தொழில்” என முடியும் குறளையும்      2+2=4               அடிபிறழாமல்   எழுதுக.
எ) 24. எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.  2x2=4
     அ) புனைந்தோம்                       ஆ) அறைதல்                            இ) வாழ்த்துவம் 
     ஈ) வந்தனன்                              உ) அறிந்தனை                         ஊ) துறவற்க
25. கீழ்க்கோடிட்ட  தொடர்களுள் ஏதேனும் மூன்றனுக்கு மட்டும் இலக்கணக் குறிப்பு  எழுதுக.                                                                                                                             3 x2=6
     அ) சிறைப்பறவை                                ஆ) நெடுந்தேர்   
    இ)குருகும்                                          ஈ) எற்றா        விழுமம்       
    உ) மதிக்குடை                                         ஊ) விக்கி விக்கி
26. எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக.                        2x2=4
    அ) சிலம்பொன்று                   ஆ) திண்டிறல்                               இ) நன்னூல்
    ஈ) அறைந்தறைந்து                 உ)பெண்ணரசு                            ஊ) வடமேற்கு
27. பின்வருவனவற்றிற்கு சான்று தந்து விளக்குக.                                                         1x4=4
   பொதுவியல் திணை அல்லது வரைவுகடாதல் துறையை விளக்குக.
28. ”உதவி வரைத்தன்று உதவி உதவி                                                                      1x4=4
      செயப்பட்டார் சால்பின் வரைத்து”
    -இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணியைச் சுட்டி விளக்குக.
                                      அல்லது
உவமை அணி அல்லது எடுத்துக்காட்டு உவமையணியை விளக்குக.

எ) பொருத்துக
                                                                                                         4x1=4
     சொல்                                            பொருள்

29. செட்டு                                                              -கதிரவன்
30. சிந்தை                                                        -நூல்
31. வெய்யோன்                                                 -சிக்கனம்
32. சுவடி                                                          -உள்ளம்                 
                                                                              -அறியாமை.

ஏ. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :                                  16x1=16
         
33. ‘ஒன்றே யென்னின் ’ என்னும் கடவுள் வாழ்த்து வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள
     காண்டம்
     ஆ) சுந்தர காண்டம்
     இ) யுத்த காண்டம்.
34. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல்
     அ) அகநானூறு
     ஆ) ஐங்குறுநூறு
     இ) புறநானூறு
35. நற்றிணையைத் தொகுப்பித்தவன்
    அ) ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்
    ஆ) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
    இ) பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி.
36. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
     அ) பிசிராந்தையார்
     ஆ) பாண்டியன் பரிசு
     இ) குடும்ப விளக்கு.
37. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது
     அ) பழமொழி
     ஆ) திருவள்ளுவமாலை
     இ) நீதிநெறி விளக்கம்.
38. ‘பராய்க்கடன்’ –என்றால்
     அ) வேண்டிக்கொள்ளுதல்
     ஆ) விரும்புதல்
     இ) வணங்குதல்.
39. செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண விரும்பியவர்
  அ) பாரதியார்
  ஆ) பாரதிதாசன்
  இ) கம்பதாசன்
40. ’மருகி’என்பதன் பொருள்
  அ) மகள்
  ஆ) மருமகள்
   இ) அம்மா.
41. சுந்தரன் என்ற பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர்
   அ) அனுமன்
   ஆ) இராவணன்
   இ) இலக்குவன்.
42. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச்செல்ல வேண்டி விதித்த காலம்
   அ) ஒரு திங்கள்
   ஆ) ஓராண்டு
   இ) ஒருநாள்.
43. பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
   அ) குயில்
   ஆ) மயில்
   இ) சிட்டு.
44. தனயை என்ற சொல்லின் பொருள்
   அ) அம்மா
   ஆ) உடன்பிறந்தாள்
   இ) மகள்.


45. வீரமாமுனிவரின் தாய்நாடு
   அ) தமிழகம்
   ஆ) பிரான்சு
   இ) இத்தாலி.
46. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம்
   அ) மதுரைக் கலம்பகம்
   ஆ) நந்திக் கலம்பகம்
   இ) காசிக் கலம்பகம்.
47. பாரதிதாசனின் இயற்பெயர்
  அ) துரைராசு
  ஆ) எத்திராசன்
  இ) சுப்புரத்தினம்.



48. உவமைக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டவர்
  அ) சுப்பிரமணிய பாரதி
  ஆ) சுரதா
   இ) கண்ணதாசன்.
ஐ. கோடிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்புக.                                                   2+2=4
49. அறிவற்றங் காக்கும் …………………. செறுவார்க்கும்
      உள்ளழிக்க லாகா ……………………. .
50. உதவி வரைத்தன் …………….. உதவி
      செயப்பட்டார் ............................... வரைத்து.

                                        ===============================





 
  



Free Code Script

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...